மதுவுக்கு அடிமையான இளைஞர் தற்கொலை

தாயின் அறிவுறுத்தலுக்குப் பிறகு, மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்து தற்கொலை;

Update: 2025-03-27 09:30 GMT

மதுவுக்கு அடிமையான மது தாயின் அறிவுறுத்தலுக்குப் பிறகு தற்கொலை

சத்தியமங்கலம்: தாளவாடிமலை கல்மண்டி புரத்தை சேர்ந்த சுந்தரம்மாவின் மகன் மது (26), மளிகை கடையில் வேலை செய்துவந்தார். ஆனால், அதிகமாக மதுபானம் அருந்தும் பழக்கத்தால், வேலைக்குச் செல்லாமல் அலையும் நிலை ஏற்பட்டது.

நேற்று காலை, மகன் அடிக்கடி குடித்துவிட்டு திரிவதை கவனித்த தாய் சுந்தரம்மா, "இப்படி தொடர்ந்து குடித்தால் எதிர்காலம் எப்படி?" என்று கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மது, வீட்டை விட்டு வெளியேறினார்.

சில மணி நேரங்களில், ஊருக்கு வெளியே ஒரு குட்டைக்கு அருகில் வாயில் நுரையுடன் மயங்கி கிடந்தார். அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது ஏற்கனவே உயிரிழந்தது உறுதியானது.

மது பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News