சாலையோரம் நின்று கொண்டிருந்தவா்கள் மீது காா் மோதியதில் 5 போ் காயம்

ஈரோடு அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தவா்கள் மீது காா் மோதியதில் 5 போ் காயமடைந்தனா்.;

Update: 2025-02-28 04:50 GMT

ஈரோடு : ஈரோடு அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 5 பேர் காயமடைந்தனர்.

ஈரோடு, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது காரில் புதன்கிழமை இரவு ஈரோட்டில் இருந்து பெருந்துறை சாலையில் சென்று கொண்டிருந்தார். திண்டல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

காயமடைந்தவர்கள்

இதில் சாலையோரம் ஒரு ஹோட்டலின் வெளியில் நின்று கொண்டிருந்த பெண், சிறுவன் உள்பட 5-க்கும் மேற்பட்டோர் மீது கார் மோதியது. இதில், ரங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ராஜ்குமார், கௌதமன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் காயம் அடைந்தனர். அனைவரும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விசாரணை

இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஈரோடு தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். அதில், சிவகுமார் ஓட்டி வந்த காரில் பிரேக் பிடிக்காததால் காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் சாலையோரம் நின்றவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

விபத்து குறித்த சிசிடிவி காட்சி, சமூக ஊடகத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்திள்ளது. இந்த விபத்து குறித்து தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எச்சரிக்கை

சாலையில் வாகனத்தை ஓட்டும் போது பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சட்டென பிரேக் போடுவதால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும். மேலும், நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளும் வாகனத்தின் வேகத்தை கணக்கில் கொண்டு செல்ல வேண்டும்.

Tags:    

Similar News