நந்தா தொழில்நுட்ப கல்லுாரியில் 17வது விளையாட்டு விழா
நந்தா கல்லுாரியில் விளையாட்டு விழா: மாணவர்கள் சிலம்பம், கராத்தேவில் திறமைகளை வெளிப்படுத்தினர்;
நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் 17வது விளையாட்டு விழா கோலாகலம்
ஈரோடு நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் 17வது விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், இந்திய கைப்பந்து அணி வீரர் நவீன் ராஜா ஜேகப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.
ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவன செயலர் திருமூர்த்தி, முதன்மைக் கல்வி அதிகாரி ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி முதல்வர் நந்தகோபால் அனைவரையும் வரவேற்றார். உடற்பயிற்சிப் பேராசிரியர் பாஸ்கரன் ஆண்டறிக்கையை வாசித்தார்.
நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்குச் சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கிப் பேசினார். அதைத் தொடர்ந்து சிலம்பம் மற்றும் கராத்தே போன்ற கலைகளில் மாணவ மாணவியர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். கணினி அறிவியல் துறை மாணவி தீபிகா நன்றியுரை வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்பயிற்சிப் பேராசிரியர் பாஸ்கரன், பிற பேராசிரியர்கள், கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.