நிலக்கோட்டை அருகே புலித்தோல், மான்தோல், கருங்காலி கட்டைகள் பறிமுதல்

நிலக்கோட்டை வீலிநாயக்கன்பட்டி தவயோகி ஸ்ரீ ஞானதேவபாரதி சுவாமிகள் மடத்தில் புலித்தோல், மான்தோல், கருங்காலி கட்டைகள் பறிமுதல்

Update: 2021-07-05 01:36 GMT

நிலக்கோட்டை அருகே புலித்தோல், மான்தோல், கருங்காலி கட்டைகள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வீலிநாயக்கன்பட்டி கிராமத்தில் தவயோகி ஸ்ரீ ஞானதேவபாரதி சுவாமிகள் மடத்தில் வத்தலகுண்டு வனசரக அதிகாரி ஆறுமுகம் தலைமையில் இன்று (04.07.21) சோதனை நடத்தினர்.
அப்போது மடத்தில் புலித்தோல், மான்தோல், மயில் தோகைகள் மற்றும் கருங்காலி கட்டை ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ஆசிரமத்தை நடத்தி வந்த தவயோகி தற்போது தலைமறைவாகி உள்ளார். அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News