தர்மபுரி பட்டுவளர்ச்சித்துறையில் வரும் 25ம் தேதி கழிவு வாகனம் ஏலம்

தர்மபுரி பட்டுவளர்ச்சித்துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனம் வரும் 25ம் தேதி ஏலம் விடப்படுவதாக அறிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-11 13:27 GMT

பைல் படம்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பருவதனஅள்ளி ஊராட்சி, பட்டு வளர்ச்சித்துறை, அரசு வாகன எண்.TN 27 G 1159 அர்மதா ஈப்பு கழிவு செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட வாகனத்தை 25.05.2022 அன்று பிற்பகல் 03.00 மணியாவில் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது.

மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என பென்னாகரம் பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குநர் இரா.வில்சன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News