தருமபுரியில் வரும் 30ம் தேதி பறிமுதல் வாகனங்கள் ஏலம்: காவல் துறை அறிவிப்பு

தருமபுரியில் வரும் 30ம் தேதி பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-03-27 06:13 GMT

பைல் படம்.

தருமபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 11 நான்கு சக்கர மற்றும் 82 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 93 வாகனங்கள் வரும் 30 -ம் தேதி காலை 9 மணிக்கு, தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளன.

நான்கு சக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் முன் வைப்பு தொகையாக ரூ.10,000/-ம், 30 - ம் தேதி காலை 8 மணிக்குள் ஏலம் நடைபெறவுள்ள இடத்தில் செலுத்த வேண்டும். முன் வைப்புத்தொகை செலுத்துவோர் மட்டுமே ஏலத்தில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.

ஏலம் விடப்படவுள்ள வாகனங்களைத் தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் அன்று காலை 7 மணிக்கு நேரில் பார்வையிடலாம். இருசக்கர வாகனத்திளை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நான்கு சக்கர வாகனத்திற்கு ஏலத்தொகைக்கு ஏற்ப 18 விழுக்காடு GST யும், இருசக்கர வாகனத்திற்கு ஏலத்தொகைக்கு ஏற்ப 12 விழுக்காடு GST யும் சேர்த்துச் செலுத்தப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமல்பிரிவு, தருமபுரி அவர்களின் அலுவலகத்தினை நேரடியாகவோ, 04342- 230759, 262581 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News