தர்மபுரி கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு ஊர்தி உபகரணங்கள் வரும் 8ம் தேதி ஏலம்

தர்மபுரியில் வரும் 8ம் தேதி கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு ஊர்தி உபகரணங்கள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-03 06:23 GMT

பைல் படம்.

தருமபுரி மாவட்டம், 6-தீயணைப்பு மீட்புப்பணி நிலையங்களின் ஊர்திக்கு பயன்படுத்தப்பட்ட உதிரி பாகங்கள், நீர் விடு குழாய்கள், பண்டகசாலை பொருட்கள் மற்றும் மீட்பு அழைப்பு உபகரணங்கள் அதன் உழைப்புக் காலத்தை முடித்து தற்போது பயன்படுத்த இயலாமல் உள்ளது.

இதனால் பயனற்ற இரும்பு பொருட்கள் சுமார் 500 கிலோ  அளவில் இருப்பதையும் கழிவு செய்து 08-04-2022 அன்று முற்பகல் 11:30 மணியளவில் தருமபுரி தீயணைப்பு மீட்புப்பணி நிலைய வளாகத்தில் பொது ஏலம் விட உத்தேசிக்கப்பட்டுள்ளது.  ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட தீயணைப்பு மீட்புப்பணிகள், மாவட்ட அலுவலர் இர அப்பாஸ்  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News