வேளாண் உபகரணங்களை உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கிய அமைச்சர்

திட்டக்குடி அருகே உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூபாய் 35 லட்சம் மதிப்புள்ள வேளாண் உபகரணங்களை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்

Update: 2021-07-19 10:30 GMT

திட்டக்குடி அருகே வேளாண் உபகரணங்களை உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அமைச்சர் வழங்கினார்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மங்களூர் வடக்கு ஒன்றியம், ம.புடையூரில் ரூபாய் 35 லட்சம் மதிப்புள்ள வேளாண் உபகரணங்களை உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு, 2020-21 திட்டத்தின்படி, தமிழக அரசு தோட்டக்கலை துறை மூலம் வேளாண் உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்,சி.வெ. கணேசன்  விவசாயிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் வேளாண்துறை துணை இயக்குனர் கென்னடி, ஜெபக்குமார், உதவி இயக்குனர் .அமுதா, தோட்டக்கலை உதவி இயக்குனர் அருள்தாஸ், மற்றும் உதவி தோட்டக்கலை இயக்குனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News