பண்ருட்டியில் மாடு மேய்க்கச் சென்ற முதியவர் இடி தாக்கி உயிரிழப்பு

பண்ருட்டியில் மாடு மேய்க்கச் சென்ற முதியவர் இடி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-08-26 16:52 GMT

பைல் படம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது. நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி ஊரைச் சேர்ந்தவர் கண்ணன் (65). இவர் பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தபொழுது மழையின் காரணமாக  மரத்தின் அடியில் நின்று இருந்த கண்ணன்  இடி தாக்கி இறந்துவிட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News