சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளைப்போட்டு மதுபாட்டில்கள் திருட்டு

Update: 2021-05-26 04:45 GMT

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பின்னலூர் கிராமம். இந்த கிராமத்தில் வயல்வெளியில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அந்த வகையில் பின்னலூரில் உள்ள டாஸ்மாக் கடையும் மூடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், நேற்று அந்த கடையின் பின்பக்க சுவரில் துளை போடப்பட்டிருப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், இன்ஸ்பெக்டர் மைக்கேல் மற்றும் போலீசார், டாஸ்மார்க் மேற்பார்வையாளர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

தொடர்ந்து மேற்பார்வையாளர் செந்தில்குமார் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்த மதுபாட்டில்கள் திருடு போனது  இருந்தது. இதன் மதிப்பு ரூ.97 ஆயிரம் ஆகும். கடை நீண்ட நாட்களாக பூட்டியிருப்பதை பயன்படுத்தி, மர்ம மனிதர்கள் சுவரில் துளைப்போட்டு உள்ளே சென்று மதுபாட்டில்களை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

Similar News