சென்னையில் சிறப்பு மருத்து முகாம்

சென்னை தரமணியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை மேயர் பிரியா துவங்கி வைத்தார்.

Update: 2022-03-11 08:30 GMT

சென்னை தரமணியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை மேயர் பிரியா துவங்கி வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

சென்னை தரமணியில் உள்ள பள்ளி வளாகத்தில் வரும் முன் காப்போம், சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு, டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இதனை சென்னை மேயர் பிரியா மற்றும், துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் துவங்கி வைத்து பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேயர் மூன்றாவது மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இங்கு எல்லா வகையான மருத்துவமும் இருக்கு, இலவச மருத்துவம், மக்கள் இதனை உபயோகித்து கொள்ள அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News