சென்னையில் சாலைகளை மூடிய பனி மூட்டத்தால் சிரமப்பட்ட வாகனஓட்டிகள்

சென்னையில் வழக்கத்துக்கு மாறாக சாலையை மூடிய பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட நேரிட்டது

Update: 2022-03-10 00:30 GMT

சென்னையில் அதிகாலை நிலவிய பனி மூட்டம்

சாலைகளை மூடிய பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி

சென்னையில் வழக்கத்துக்கு மாறாக சாலையை மூடிய பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்,

சென்னை திருவொற்றியூர் பகுதியிலுள்ள மணலி விரைவு சாலையில் மற்றும் ரயில் நிலையங்களில் பனி மூட்டத்துடன் காணப்பட்டதால் இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை ஓட்டிச் சென்றனர் இதனால் பெரும்பாலான இடங்களில் வழக்கத்தைவிட பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டதால் காலையில் வேலைக்கு செல்பவர்கள் மிகச் சிரமத்துடன் சென்றுள்ளன குறிப்பாக ரயில் நிலையங்களில் தண்டவாளங்கள் தெரியாத அளவில் பனிமூட்டம் காணப்பட்டதால் ரயில்கள் சற்று தாமதமாகவே ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


Tags:    

Similar News