வண்ணாரப்பேட்டையில் பெண்ணை தாக்கிய 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்ணை தாக்கிய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-04-07 05:02 GMT

திருவொற்றியூர் அடுத்த வண்ணாரப்பேட்டை போஜ ராஜன் நகர் பகுதியில் வசித்து வருபவர் . விஜயலட்சுமி (வயது 45) இவர் ஆர். எஸ். ஆர் .எம். தனியார் மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள ரயில்வே இருப்பு பாதை அருகே உடல் உபாதை கழிக்க சென்ற போது அங்கு நின்றிருந்த 5 பேர் அங்கேயே நின்று தாக கூறப்படுகிறது அதை விஜயலட்சுமி தட்டி கேட்டுள்ளார்.

அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கு இருந்த 5 பேர் விஜயலட்சுமி இரும்புக்கம்பியால் இடுப்பு முதுகு பகுதியில் தாக்கிவிட்டு கழுத்திலிருந்த தாலி சங்கிலி பறித்து விட்டு  தப்பி ஓடி உள்ளனர். இதுகுறித்து விஜயலட்சுமி வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News