திருவொற்றியூர் அருகே சாலை விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

திருவொற்றியூர் அருகே நடந்த சாலை விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்தான்.

Update: 2022-05-21 05:45 GMT

உயிரிழந்த புகழ்குமரன்.

திருவொற்றியூர் சரஸ்வதி நகர் 12வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் அர்ஜுன். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.  இரவு நேரங்களில் பணி செய்து வந்ததால் நிலையில் பகுதிநேர வேலையாக சுகியின் டெலிவரி பாயாக வேலை செய்து வந்தார்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் இரவு பணியை முடித்துவிட்டு காலையில் வீட்டிற்கு வந்த அர்ஜுன் வழக்கம் போல காலையில் பகுதி நேரம் சுகி உணவு டெலிவரி செய்யும் பணியைத் தொடங்கிய அவர் மணலி பகுதியில் உணவை தெளிவரி செய்வதற்காக அவரது மூன்றாவது குழந்தையான 5 வயது சிறுவன் புகழ் குமரனை உடன் அழைத்துச் சென்று டெலிவரி முடித்துவிட்டு மணலி விரைவு சாலை வழியாக சாத்தாங்காடு காவல் நிலையம் அருகே வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது தூக்கக்கலக்கத்தில் சென்டர் மீடியனில் மோதி சிறுவன் புகழ் குமார் வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிறுவனின் தந்தை பலத்த காயங்களுடன் திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

சமீபத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அண்ணன் தங்கை சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் மீண்டும் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News