காசிமேட்டில் பெண்ணின் கையை வெட்டி செல்போனை பறித்த 3 பேர் கைது

காசிமேட்டில் பெண்ணின் கையை வெட்டி விட்டு செல்போனை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-07 11:45 GMT

கைது செய்யப்பட்ட முகேஷ், கார்த்தி, பரத்.

திருவொற்றியூர் அடுத்த தண்டையார்பேட்டையில் உள்ள பிரிண்டிங் அச்சகம் ஒன்றில் பணிபுரிந்து வருபவர் கமலி வயது 24 . இவர் முத்தமிழ் நகர், தண்டையார்பேட்டை பகுதியை சார்ந்தவர் அச்சகத்திற்கு வேலைக்கு சென்று விட்டு காசிமேடு கடற்கரை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கமலியை மர்ம நபர்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர் கமலின் கையில் கத்தியால் வெட்டி விட்டு அவரது கையிலிருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கமலி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் கமலி புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் முகேஷ், கார்த்தி, பரத் ஆகிய மூன்று பேரை கைது செய்து நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News