சூறாவளி பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் இன்று ஈடுபடும் இடங்கள்

தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் இன்று சூறாவளி பிரசாரத்தில் பல்வேறு பகுதிகளில் ஈடுபடுகின்றனர்.

Update: 2021-03-23 05:45 GMT

வேப்பனஹள்ளி, பாலக்கோடு, சேலம் வடக்கு ஆகிய பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஈடுபடுகிறார். உடுமலைப்பேட்டை, கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு. ஆகிய பகுதிகளில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்கிறார்.

சாத்தூர் - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ. தேனி, தூத்துக்குடி மாவட்டம் - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன். காட்பாடி, ஊத்தங்கரை -  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,

மதுரை, மேலூர் - தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, தாராபுரம் -  பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், - திருப்பரங்குன்றம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,

மதுரை -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன். சென்னை -  இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன். உளுந்தூர்ப்பேட்டை, விழுப்புரம், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் - அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். 

மயிலாடுதுறை, கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருச்சி கிழக்கு  -  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். அம்பாசமுத்திரம், தென்காசி, ஆலங்குளம் - சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மை துணை பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார்,

திருவொற்றியூர் - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி. இவ்வாறு இன்று அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு இடங்களில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.




Tags:    

Similar News