ஐந்து வருடங்களாக தலைமறைவாக இருந்த பிரபல கஞ்சா வியாபாரி ஓட்டேரியில் கைது

ஓட்டேரியல் ஐந்து வருடங்களாக தலைமறைவாக இருந்த பிரபல கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-18 09:36 GMT

ஓட்டேரி போலீசாரால் கைது செய்யப்பட்ட பிரபல கஞ்சா  வியாபாரி.

சென்னை அயனாவரம் திக்காகுளம் பகுதியை சேர்ந்தவர கண்ணன் என்கின்ற மாயக்கண்ணன் வயது 43. இவர் பிரபல கஞ்சா வியாபாரி இவர் மீது செம்பியம் ஓட்டேரி புளியந்தோப்பு பேசின் பிரிட்ஜ் பட்டாபிராம் மதுரை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட காவல் நிலையங்களில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

குறிப்பாக பட்டாபிராம் ஓட்டேரி ஆகிய இடங்களில் மூன்று கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஓட்டேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக சிறு சிறு கஞ்சா வியாபாரிகளை பிடித்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆந்திராவிலிரந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது பிரபல கஞ்சா வியாபாரி மாயக்கண்ணன் இவர்களுக்கு கஞ்சாவை விற்று வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

 அதனடிப்படையில் ஓட்டேரி போலீசார் நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் புததூர் அருகே மாயக்கண்ணனை மடக்கிப் பிடித்தனர் அவரை ஓட்டேரி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சிறு சிறு வியாபாரிகள் மூலம் விற்று வந்ததை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News