பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை -செங்கல்பட்டு ரயில்கள் ரத்து

சென்னை எழும்பூா், விழுப்புரம் மாா்க்கத்தில் காட்டாங்கொளத்துார்-கூடுவாஞ்சேரி நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

Update: 2021-09-14 05:15 GMT

அதன்படி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு நாளை,  செப்டம்பா் 17, 20, 22, 24, 27 ஆகிய தேதிகளில், காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு, நாளை மற்றும் செப்டம்பா் 17, 18, 20, 22, 24, 25, 27 ஆகிய தேதிகளில், காலை 10.56 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு செப்டம்பா் 18, 25 ஆகிய தேதிகளில், பகல் 11.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்,  கூடுவாஞ்சேரி- செங்கல்பட்டு இடையே, பகுதி ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு செப்டம்பா் 15, 17, 20, 22, 24, 27 ஆகிய தேதிகளில் பகல் 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே பகுதி ரத்துசெய்யப்படுகிறது.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு செப்டம்பா் 15, 17, 18, 20, 22, 24, 25 ஆகிய தேதிகளில் பகல் 12.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு செப்டம்பா் 18, 25 ஆகிய தேதிகளில் மதியம் 1 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே ரத்து செய்யப்படுகிறது.

திருமால்பூா்-சென்னை கடற்கரைக்கு செப்டம்பா் 15, 17, 20, 22, 24, 27 ஆகிய தேதிகளில் காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு மாற்றாக, ஒரு பயணிகள் ரயில் திருமால்பூரில் இருந்து செப்டம்பா் 15, 17, 20,22, 24, 27 ஆகிய தேதிகளில் நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரையில் இயக்கப்படும் என்ற் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News