அமெரிக்காவில் இருந்து மருத்துவ பரிசோதனை முடிந்து, சென்னை திரும்பினார் ரஜினி காந்த்
அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்து நடிகர் ரஜினி காந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.;
அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினி காந்த்
கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் நடிகர் ரஜினிக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, அவ்வப்போது ரஜினிகாந்த் அமெரிக்காவில் அதே மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து
கடந்த 19 ம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மத்திய அரசின் அனுமதியோடு ரஜனிகாந்த் அமெரிக்கா சென்றிருந்தார்.
அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்த பின் சில நாட்கள் ஓய்வெடுத்த ரஜினிகாந்த் இன்று அதிகாலை 3 மணி அளவில் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
சென்னை விமானத்தில் வந்த ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் தலைவா வாழ்க என கோஷமிட்டு வரவேற்றனர். அப்போது மருத்துவ பரிசோதனை நல்லப்படியாக முடிந்தது என தகவல் தெரிவித்தார். அண்ணாத்த படம் டிப்பிங் பணிகளில் ஈடுபடுவார் என்றும், அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.