கொடுங்கையூரில் தாயின் கன்னத்தில் அடித்த மகன்: கைக்கு வந்தது காப்பு

கொடுங்கையூரில் கன்னத்தில் அடித்ததால் சிகிச்சை பெற்று வந்த தாய் இறந்ததால், மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-14 17:39 GMT

பைல் படம்.

சென்னை, கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த அம்சா (பெ/64) என்பவர் கடந்த 9ம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது, அவரது மகன் சதிஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்பொழுது, சதிஷுக்கும் அவரது தாய் அம்சாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், சதிஷ், அவரது தாயார் அம்சாவை கன்னத்தில் அடித்துள்ளார். இதனால் அம்சா மயக்கமடைந்ததால் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அவர் உயிரிழந்து விட்டார்.

இச்சம்பவம் குறித்து, அம்சாவின் உறவினர்  கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உயிரிழந்த அம்சாவின் மகன் சதிஷ் (எ) சதிஷ்குமார் (வ/36) என்பவரை கைது செய்தனர். 

Tags:    

Similar News