வியாசர்பாடியில் கோயிலுக்குச் சென்ற மூதாட்டியிடம் தாலிச்சங்கிலி பறிப்பு

இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர்

Update: 2021-12-30 08:01 GMT

கோயிலுக்குச் சென்ற மூதாட்டியிடம்   தாலிச்சங்கில்  பறித்துச்சென்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 4வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன்(70.) இவர் சென்னை மாநகர போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மல்லிகா( 63 ). இவர் நேற்று காலை 7 மணியளவில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு  சர்மா நகர் முதல் மெயின் ரோடு வழியாக  நடந்து சென்றுகொண்டிருந்தார்.  அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர்  மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த 8  பவுன்  தாலிச்சங்கிலியை  பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். மல்லிகா கூச்சலிட்டதால் அருகிலிருந்தோர்  ஓடிவந்து மல்லிகாவை மீட்டு எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக  எம்கேபி நகர் போலீஸார்  வழக்குப்பதிவு செய்து திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News