வியாசர்பாடியில் பணம் பறித்த வழக்கில் 4 ரவுடிகள் கைது

சென்னை வியாசர்பாடியில், இன்சூரன்ஸ் ஏஜென்டை தாக்கி பணம் பறித்த வழக்கில் 4 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-14 06:15 GMT

சென்னை வியாசர்பாடி 11வது கிழக்கு குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் 35 இவர் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஏஜென்டாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் சத்தியமூர்த்தி நகர் 39 வது பிளாக் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.  அப்போது அப்பகுதியில்,  மது அருந்திக் கொண்டிருந்த 4 பேர்,  யுவராஜை அழைத்து அவரிடம் தகராறு செய்தனர்.

அங்கு ஏற்பட்ட வாய்த்தகராறில்,  நால்வரும் சேர்ந்து யுவராஜ் தலையில் பலமாக தாக்கினர்.  யுவராஜ் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து,  அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதில்,  தகராறில் ஈடுபட்ட வியாசர்பாடி,  மல்லிப்பூ காலனி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்கின்ற வெள்ளை பிரகாஷ் 25 மற்றும் அதே பகுதியை சேர்ந்த வைரமுத்து 29 முகமது ஜாகீர் 25 முகமது ரிஸ்வி 25 ஆகிய 4 பேரையும் கைது செய்தனர் வியாசர்பாடி போலீசார் நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News