பானிபூரி சாப்பிட்டதற்கு பணம் கேட்டவருக்கு சரக்கு பாட்டிலால் அடி உதை

பானிபூரி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை உரிமையாளருக்கு அடி உதை கிடைத்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-11-28 09:03 GMT
பைல் படம்

சென்னை வியாசர்பாடி மூர்த்திங்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் சுனில் வயது 26 இவர் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார் நேற்றிரவு எட்டு மணி அளவில் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப் பாதை அருகே பானிபூரி விற்று கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஐந்து நபர்கள் தங்களுக்கு தேவையான பானிபூரியை சாப்பிட்டுள்ளனர்

சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் அங்கிருந்து புறப்பட்டு உள்ளனர்.இதனால் தள்ளுவண்டி கடை நடத்திய சுனில் அவர்களிடம் பணம் கேட்டுள்ளார் அப்போது அங்கு இருந்த ஐந்து நபர்களும் சுனிலை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்துள்ளனர்

அப்போது அருகில் இருந்த சிறிய மது பாட்டிலை எடுத்து அதை சுனிலின் நடுத் தலையில் ஓங்கி அடித்து உள்ளனர். இதில் சுனில் தலையிலிருந்து ரத்தம் வந்துள்ளது. உடனடியாக அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று உள்ளார் மேலும் இது குறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் பானிபூரி சாப்பிட்டுவிட்டு கடைக்காரரை தாக்கிய 5 நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News