எம்கேபி நகர் பகுதியில் 123 கிலோ குட்கா பறிமுதல்: இருவர் கைது

சென்னை எம்கேபி நகர் பகுதியில் 123 கிலோ குட்கா பறிமுதல் செய்து இருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-12-07 13:16 GMT

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள்.

சென்னை, எம்கேபி நகர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக எம்கேபி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வியாசர்பாடி பகுதியில் சந்தேகத்திற்கிடமான பெட்டிக்கடைகளில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது எம்கேபி நகர் 14 வது  மேற்குப் குறுக்கு தெரு பகுதியில் பெட்டிக் கடை ஒன்றில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் வந்து செல்வது தெரியவந்தது. இதனையடுத்து  போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை செய்தபோது பெட்டி பெட்டியாக குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கடையில் இருந்த 123 கிலோ குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடையில் இருந்த  வியாசர்பாடி ஸ்டீபன்சன் சாலை பகுதியைச் சேர்ந்த கண்ணன் வயது 51 என்ற நபரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், எம்கேபி நகர், வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த முகமது சிக்கந்தர் 38 என்ற நபரிடம் இருந்து அவர் குட்கா பொருட்கள் வாங்கியது தெரியவந்தது.

இதனையடுத்து அவரையும் கைது செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News