கொரோனா- சோதனை அதிகளவில் மேற்கொண்டதால் பாதிப்பு அதிகளவில் பதிவானதாக மாநகராட்சி தகவல்

Update: 2021-06-10 14:39 GMT

கொரோனா 2 ஆம் அலையில், சென்னையின் 15 மண்டலங்களிலும் ஏப்ரல் ஒன்றாம் வாரத்தை விட ஜுன் ஒன்றாம் வாரத்தில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரலில் 9 வயதுடையோர் 299 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஜுனில் அது 493 ஆக அதிகரித்துள்ளது.

மே மாதம் 10 முதல் 19 வயதிற்கு உட்பட்ட1040 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஜுன் முதல் வாரத்தில் அது 1755 பேராக அதிகரித்துள்ளது.

20முதல் 29 வயதினரில் ஏப்ரல் மாதத்தை விட ஜூன் ஒன்றாம் வார பாதிப்பு குறைந்துள்ளது.

50 முதல் 59 வயது பிரிவில் 3249 ஆக இருந்த பாதிப்பு 2724 ஆக குறைந்துள்ளது.

சோதனை அதிகளவில் மேற்கொண்டதன் காரணமாகவே பாதிப்பு அதிகளவில் பதிவானதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News