பெரம்பூரில் மன உளைச்சலில் பெண் தற்கொலை

மனஉழைச்சல் காரணமாக பெரம்பூரில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-02-06 05:44 GMT

சென்னை பெரம்பூர் தாமோதரன் தெரு பகுதியை சேர்ந்தவர் சுசிலா.  இவரது கணவர் பழனிசாமி இறந்துவிட்டார் இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர் சுசிலா கடந்த மூன்று வருடங்களாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவர்களை அணுகியும் அவருக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை சுசிலா வீட்டிலிருந்து கரும்புகைவருவதை பார்த்த ரமேஷ் என்பவர் இது குறித்து வீட்டின் உரிமையாளரிடம் கூறியுள்ளார்.  அக்கம்பக்கத்தினர் அனைவரும் சென்று கதவை திறந்து பார்த்தபோது உடல்முழுவதும் தீக்காயத்துடன் சுசீலா கருகிய நிலையில் இருந்தார்.

உடனடியாக இது குறித்து திருவிக நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின்பேரில் அங்கு வந்த திருவிக நகர் போலீசார் சுசீலாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Tags:    

Similar News