திருவிக நகரில் டூ வீலர் திருடிய நபர் கைது: வாகனங்கள் பறிமுதல்

திருவிக நகரில், இரு சக்கர வாகனம் திருடிய நபர் கைது செய்யப்பட்டார்; இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-01-25 11:54 GMT

சென்னை கொருக்குப்பேட்டை பாரதி பத்தாவது தெருவைச் சேர்ந்தவர் அஜித் வயது 22 இவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 8ஆம் தேதி பெரம்பூர் சாந்தி நகர் 2வது தெருவில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்துள்ளார். இரவு வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு மறுநாள் காலை வந்து பார்த்தபோது, அது காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து,  திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த  போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்  இதில்,  எருக்கஞ்சேரி  பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர் பெரம்பூர் ஜமாலையா ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சிவா வயது 21 என்பது தெரியவந்தது. அவரை சிறையில் அடைத்த போலீசார், அவரிடம் இருந்து இரு டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News