கொளத்தூர் அருகே ராஜமங்கலத்தில் ரவுடி வெட்டி படுகொலை

கொளத்தூர் அருகே ராஜமங்கலத்தில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2022-03-15 00:00 GMT

சென்னை கொளத்தூர் பாரத் ராஜீவ் காந்தி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பழனி  27.  இவர் ஆட்டோ டிரைவர். இவர் மீது ராஜமங்கலம்,  கொளத்தூர் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.  நேற்று இரவு 7 மணி அளவில் கொளத்தூர், மக்காரம் தோட்டம் வழியாக சென்று கொண்டிருந்த போது, மூன்று பேர் இவரை கத்தியுடன் துரத்தி வந்துள்ளனர்.

உடனடியாக பழனி,  கொளத்தூர் மக்காரம் தோட்டம் பகுதியில் உள்ள,  மோகன்  என்பவரது வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளார். துரத்தி வந்த மூன்று பேரும், அங்கு  சரமாரியாக பழனியை  வெட்டியுள்ளனர்.  இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பழனி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.  அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ராஜமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பழனியின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆதி என்கின்ற ஆதிகேசவன் விக்னேஷ். சரண்ராஜ்  உள்ளிட்ட சிலர்,  உயிரிழந்த பழனி உடன் ஒரே வழக்கில் சிறையில் இருந்ததாகவும்,  பழனி தனது கூட்டாளி மனைவி ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததால் அவரை பல முறை எச்சரித்தும் அவர் கள்ளத் தொடர்பை  துண்டிக்காத காரணத்தினால்  அவரை கொலை செய்திருக்கலாம் எனவும் தெரிய வருகிறது. தொடர்ந்து ராஜமங்கலம் போலீசார் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News