ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி வீட்டில் கொள்ளை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி வீட்டில் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.;
கொள்ளை நடந்த போலீஸ் அதிகாரி வீடு.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி வீட்டில் ஏழு சவரன் தங்க நகை மற்றும் பணம் திருட்டு
சென்னை பெரியார் நகர் சந்திரசேகரன் சாலை பகுதியில் வசித்து வந்தவர் நல்லம நாயுடு இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நவம்பர் மாதம் 16ஆம் தேதி உயிரிழந்தார். இவர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது இவரது உடல் தேனி மாவட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது
இவரது வீட்டில் இருந்த இவரது மகன் சரவணன் மற்றும் உறவினர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வருகின்றனர். அன்று முதல் அந்த வீடு பூட்டிய நிலையில் இருந்து வந்துள்ளது இந்நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் சரவணனின் உறவினர் பிரனிடா என்பவர் வீட்டை சுத்தம் செய்ய சென்றுள்ளார் அப்போது வீட்டின் கதவுகளில் இருந்த பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சரவணனுக்கு தகவல் தெரிவித்தார்
சரவணன் தனது உறவினரான ஆசைத்தம்பி என்பவரிடம் கூறி வீட்டிற்கு சென்று பார்க்க கூறியுள்ளார் அப்போது வீட்டில் இருந்த பீரோ உள்ளிட்ட பொருட்கள் உடைக்கப்பட்டிருந்தன. உடனடியாக இது குறித்து பெரவள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் முதல் கட்ட விசாரணையில் வீட்டில் இருந்த ஏழு சவரன் தங்க நகை மற்றும் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் திருடு போயிருக்கலாம் என கூறப்படுகிறது மேலும் இதுகுறித்து தேனி மாவட்டத்தில் உள்ள சரவணன் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டிற்கு வந்தால்தான் திருடுபோன நகைகளின் மொத்த மதிப்பு தெரியவரும் எனவும் கூறப்படுகிறது பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.