திருவிக நகரில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற நபர் கைது

திருவிக நகரில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-01-25 10:15 GMT

மதுபானம் விற்று கைதானவர். 

சென்னை பெரம்பூர் அன்பழகன் நகர் பகுதியில், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கப்படுவதாக,  திருவிக நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்,  நேற்று முன்தினம் இரவு,  சம்பவ இடத்திற்கு சென்ற திருவிக நகர் போலீசார், அந்த பகுதியில் மதுபானம் விற்றுக் கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில், அவர் பெரம்பூர் அன்பழகன் நகர்,  ஒத்தவாடை தெரு பகுதியை சேர்ந்த சண்முகம் 44 என்பதும் இவர் ஆட்டோ ஓட்டி வருவதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து,  22 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவிக நகர் போலீசார்,  அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News