பாலியல் புகாரில் கைது: ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரிக்க இன்று மனு

பாலியல் தொல்லை ஆசிரியர் ராஜகோபாலனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

Update: 2021-05-28 04:56 GMT

ராஜகோபாலன்

ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த செனைன கே.கே.நகர் பத்ம சோத்திரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் (59) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது மேலும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News