தமிழகத்தில் இன்று புதிதாக 1432 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று புதிதாக 1432 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 25 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.

Update: 2021-10-06 15:02 GMT

பைல் படம்

தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது.

தமிழகத்தில் இன்று புதிதாக 1,432 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இதுவரை பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,72,843-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,707-ஆக உள்ளது.

கொரோனாவிலிருந்து இன்று ஒருநாளில் மட்டும் 1,519 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,20,499-ஆக உயர்நதுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 16,637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,44,832 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.

Tags:    

Similar News