தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,390 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-10-07 17:07 GMT
பைல் படம்

தமிழகத்தில் இன்று புதிதாக 1,390 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 1, 487 பேர்  சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்புயுள்ளனர். இதுவரை 26 லட்சத்து 21 ஆயிரத்து 986 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 16,513 போ் உள்ளனர். கொரோனா சிகிச்சை பலன் இன்றி 27 போ் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இறந்துள்ளனர்.

இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,734-ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News