பள்ளி பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு: அமைச்சர் அன்பில் மகேஷ்!

பள்ளிகளில் இருந்து வரும் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

Update: 2021-05-25 09:42 GMT

அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அதிகாரிகளுடன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு வரைவு அறிக்கை தயாராக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுக்கு பிறகு முறையாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

சென்னையில் உள்ள தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுப்பதற்காக புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை செய்ய அறிவுறுத்தப்படும்.

ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர், மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை விரைவில் வெளியிட உள்ளது.

பள்ளிகளில் எழும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்கப்படும். ஏற்கனவே விசாகா கமிட்டி உள்ளது. பெண் ஆசிரியர் ஒருவர் இதற்கு தலைமை வகிப்பார்.

விசாகா கமிட்டி அனைத்து பள்ளிகளிலும் உள்ளதா? செயல்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.

Tags:    

Similar News