சென்னையில் குறைகிறது... கோவையில் உயர்கிறது... கொரோனா!

கொரோனா தொற்று சென்னையில் குறைந்து வரும் அதே வேளையில் கோவையில் அதிகரித்து வருகிறது.

Update: 2021-05-27 15:44 GMT

தமிழக சுகாதாரத்துறை கொரோனா சார்பில் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 33,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 474 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் இன்று மட்டும் 2779 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதே நேரத்தில் கோவையில், 4734 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எப்போதும் சென்னையில் தான் அதிக எண்ணிக்கையில்பாதிப்பு இருக்கும். ஆனால் தற்போது கோவையில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News