போலீசார் 28 பேருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சென்னை போலீஸ் கமிஷனர்

சென்னையில் போலீசார் 28 பேருக்கு வாழ்த்து அட்டைகளை வழங்கி போலீஸ் கமிஷனர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2021-10-30 17:20 GMT

பிறந்தநாள் காணும் போலீசாருக்கு வாழ்த்து அட்டை வழங்கும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் நவம்பர் 2, 3,4 ஆகிய 3 தினங்களில் பிறந்த நாள் காணும் போலீசார் 26 பேருக்கு இன்று நேரில் அழைத்து வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான போலீசாரின் பிறந்த நாளன்று, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்  தனது வாழ்த்து செய்தியுடன், தனது கையொப்பமிட்ட பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை, பிறந்த நாள் கொண்டாடும் போலீசாரை நேரில் அழைத்து, அவர்களுக்கு வழங்கி, வாழ்த்து தெரிவித்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக நவம்பர் 2, 3,4 ஆகிய 3 தினங்களில் பிறந்த நாள் காணும் போலீசார் 26 பேருக்கு இன்று (30.10.2021) நேரில் அழைத்து தனது வாழ்த்து செய்தியுடன் கூடிய பிறந்த நாள் வாழ்த்து அட்டையை, காவல் ஆளிநர்களுக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்.

மேலும், பிறந்த நாள் காணும் காவல் அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு, பிறந்த நாளன்று அவர்களுக்கு "விடுப்பு" அளிப்பதுடன், "வான்செய்தி" மூலம் சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறையிலிருந்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சார்பாக பிறந்த நாள் வாழ்த்து செய்தியும் தெரிவிக்கப்படுகிறது. மாநகர போலீஸ் கமிஷனரின் வாழ்த்துகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் தங்களுக்கு கிடைத்ததினால் சென்னை பெருநகர போலீசார் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, போலீஸ் கமிஷனருக்கு தங்களது நன்றியினை தெரிவித்தனர்.

Tags:    

Similar News