ஐஐடியில் அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய்வாழ்த்து பாட மத்திய அரசு அனுமதி

சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது

Update: 2022-04-28 07:45 GMT

சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது, தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது

சென்னை ஐஐடியில் தமிழ்தாய் வாழ்த்து பாட அனுமதிக்க வேண்டும் எனபல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தநற்போது அது நிறைவேறியுள்ளது.

சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது, தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநில பாடமாக அறிவித்தது தமிழக அரசு குறிப்பிடத்தக்கது.

Similar News