நெல்லை பிரபல ரவுடி கோழி அருளை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்

சென்னை அம்பத்தூரில், நெல்லை பிரபல ரவுடி கோழி அருள் துப்பாக்கிமுனையில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

Update: 2021-07-17 18:11 GMT

நெல்லை பிரபல ரவுடி கோழி அருள்

சென்னை அம்பத்தூரில், நெல்லை பிரபல ரவுடி கோழி அருள் துப்பாக்கிமுனையில் தனிப்படை போலிசாரால் கைது செய்யப்பட்டான். இருதரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில் ஆடியோ பதிவு செய்து போலீசுக்கே சவால் விட்டான் கோழி அருள். இவன் மீது தமிழகம் முழுவதும் எட்டு கொலை வழக்கு உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இருதரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில் ஆடியோ பதிவு வெளிட்ட கோழி அருள் மீது அம்பாசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் சென்னை காவல்துறையினர் கோழி அருளை கைது செய்தனர்.

Tags:    

Similar News