கூடுதல் சுங்கச் சாவடிகளை அகற்ற நடிவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு

தமிழகத்தில் கூடுதலாக உள்ள சுங்கச் சாவடிகளை அகற்ற, மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Update: 2021-09-02 07:56 GMT

சட்டபேரவை  கூட்டத்தில் கேள்வி நேரத்தில் பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு

தமிழக சட்டசபை கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது சட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார். அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது.

தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும், ஆனால் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆதாலால் தமிழகத்தில் கூடுதல் சுங்கச்சாவடிகளை கண்டறிந்து அவற்றை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Tags:    

Similar News