இலங்கையிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்திய 2 பேர் விமானநிலையத்தில் கைது

இலங்கையில் இருந்து சென்னைக்கு ரூ 30 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த 2 பேர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-12-08 17:00 GMT
இலங்கையில் இருந்து பயணியால் கடத்தி வரப்பட்ட தங்கம்

இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது.அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனா்.அப்போது சென்னையை சோ்ந்த 2 ஆண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து இரு பயணிகளையும் நிறுத்தி விசாரித்தனா்.அப்போது அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினா்.இதையடுத்து இருவரையும் தீவிர சோதனைக்குட்படுத்தினா்.அதில் ஒரு பயணி தான் அணிந்திருந்த கோட்டில் 8 தங்க பட்டன்களை வைத்து தைத்திருந்தாா்.மற்றொரு பயணியின் உள்ளாடைக்குள் தங்கப்பசை பாா்சலை மறைத்து வைத்திருந்தாா்.தங்கப்பசை,தங்கப்பட்டன்களின் மொத்த எடை 700 கிராம்.அதன் மதிப்பு ரூ.30 லட்சம்.

இதையடுத்து தங்கப்பசை,தங்கப்பட்டன்களை பறிமுதல் செய்து,பயணிகள் இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Tags:    

Similar News