உதயநிதி பிறந்தநாள்: 1500 கிலோ தக்காளி இலவசமாக வழங்கிய ரசிகர்கள்

மாமல்லபுரம் அருகே, உதயநிதி ரசிகர் மன்றம் சார்பில், நரிக்குறவர் மற்றும் இருளர் மக்களுக்கு 1500 கிலோ தக்காளி பரிசாக வழங்கப்பட்டது.

Update: 2021-11-27 13:30 GMT

இலவசமாக தக்காளி வழங்கிய, உதயநிதி ரசிகர்கள். 

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில்,  செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில், நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்கள் சுமார் 800 நபருக்கு, 1500 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

திருக்கழுக்குன்றம் ஒன்றிய தலைவர் எம் பி மோகன் மற்றும் ஒன்றிய செயலாளர் குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் யுவராஜ் கலந்து கொண்டு,  அனைவருக்கும் தக்காளி வழங்கினார். இதில் ஏராளமான உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News