தாம்பரம் அருகே தேர்வுக்கு பயந்து பிளஸ் டூ மாணவன் தற்கொலை

தாம்பரம் அருகே தேர்வு பயம் காரணமாக பிளஸ் டூ மாணவன் பள்ளி சீருடை பெல்ட்டை தூக்கு கயிறாக மாற்றி தற்கொலை செய்து கொண்டார்

Update: 2021-10-02 03:30 GMT

தாம்பரம் அருகே கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்தவா் மாரியம்மாள் (43). இவருடைய கணவா் குமாரராஜா இறந்துவிட்டாா்.மாரியம்மாள் தனது 2 மகன்களுடன் வசித்து வந்தாா்.அதில் பெரிய மகன் சந்தோஷ்குமார் (17) சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிகுலேசன் தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார்.இவா் கணக்கு பாடத்தில் மதிப்பெண்கள் குறைவாக வாங்கிவந்தாா்.

இந்நிலையில் இன்று அவரது வகுப்பில் கணக்கு தோ்வுஎன்பதால், சந்தோஷ் குமாா் நேற்று இரவு வீட்டில் நீண்ட நேரம் விழித்திருந்து கணக்கு போட்டுப்பாா்த்து படித்து வந்தாா். இன்று அதிகாலை ஒரு மணிக்கு மாரியம்மாள் எழுந்து மகன் அறைக்கு சென்று பாா்த்தபோது,படித்து கொண்டிருந்த மகனுக்கு டீ போட்டு குடிக்கும்படி கொடுத்தாா். சந்தோஷ் குமாா் டீ குடித்துவிட்டு, தொடா்ந்து படிக்க தொடங்கினாா்.

காலை 7.30 மணிக்கு எழுந்த போது, மகன் அறை மூடியிருந்தது. .காலையில் தோ்வு எழுத பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதால் அவசரமாக சென்று அறைக்கதவை தட்டியும் பதில் இல்லைஎன்பதால், அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கதவை உடைத்து பாா்த்தனா்.

அங்கு சந்தோஷ் குமாா் தனது தனது பள்ளி சீருடை பெல்ட் மூலம் வீட்டு கூரை கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிா்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனா். சேலையூர் போலீசாா் விரைந்து உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து, விசாரனை நடத்துகின்றனா்.

விசாரணையில் இன்று பள்ளியில் நடைபெற இருந்த கணக்கு  தேர்வுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதிலும் அவா் பள்ளியில் சீருடைக்காக கொடுத்திருந்த பெலட்டையே தூக்கு கயிறாக மாற்றி தூக்கிட்டு உயிா் விட்டிருந்தாா்.எனவே போலீசாா் இதுபற்றி மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Tags:    

Similar News