நரிக்குறவர் மக்களுக்கு தனியார் பவுண்டேசன் சார்பில் நிவாரணம்

தாம்பரம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு தனியார் பவுண்டேசன் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது

Update: 2021-12-02 08:15 GMT

தாம்பரம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

வடக்கிழக்கு பருவமழையால் தாம்பரம் அடுத்த சேலையூர் மப்பேடு நரிக்குறவர்கள் காலனியில் மழைநீர் சூழ்ந்து. இந்த பகுதி குடியிருப்பு வாசிகள் கடுமையாக அவதியடைந்தனர்.. மேலும் மழையால் வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு ஆதியோகி டாக்டர் மணிகண்ணன் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டது.

அதன்படி சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஆதியோகி மணிகண்ணன் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் மணிகண்ணன் ,பெட்சீட், துண்டு மற்றும் உணவு பொருட்கள் வழங்கினார். 

Tags:    

Similar News