போலீசார் சைக்கிளில் ரோந்து பணி : சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது

தாம்பரம் போலீசார் சைக்கிளில் ரோந்து பணிக்கு சென்றபோது சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்தனர்.

Update: 2021-11-25 10:30 GMT

தாம்பரம் போலீசார் சைக்கிளில் ரோந்து பணி சென்றபோது கைது செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மேற்கு தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலை, பழைய செக்போஸ்ட் அருகே தாம்பரம் போலீசார் சைக்கிள் ரோந்து பணியில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் 6 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சம்பவ இடத்தில் போலீசார் சென்ற போது கும்பலாக நின்று கொண்டிருந்த ஒரு கும்பல அங்கிருந்து சிதறி ஓட முயன்றது. சைக்கிளில் போலீசார் சென்றதால் சுதாரித்து கொண்டு ஓட முடியாத நபர்களை உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் சக போலீசார் உதவியுடன் விரட்டிச் சென்று பிடித்தார்.

பிடித்த நபரை சோதனை செய்து பார்த்த போது வயிற்றில் சுமார் 1 1/2 அடி நீளமுள்ள கத்தியை வைத்திருந்தான். அதனை பறிமுதல் செய்து நான்கு பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து ஆய்வாளர் சார்லஸ் விசாரித்த போது கைதானவர்கள் புதுபெருங்களத்தூரை சேர்ந்த தங்கதுரை(20), நெடுங்குன்றத்தை சேர்ந்த அலன்ராஜ்(26), மேற்கு தாம்பரத்தை சேர்ந்த விஜய்(எ) பிரதீப்(21), குரோம்பேட்டையை சேர்ந்த கருப்பு லோகேஷ்(எ) லோகேஷ்வரன்(25), என்பதும் இவர்கள் பெயிண்டிங் மற்றும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருவதும், ஏற்கனவே பல்வேறு அடிதடி வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதில் கருப்பு லோகேஷ் சரித்திர பதிவேடு குற்றவாளி அவர் மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதே போல் மற்ற மூவர் மீதும் தாம்பரம் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அவர்களிடமிருந்து கத்தி, இரண்டு இருசக்கர வாகனம், மாத்திரை ஊசி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதோடு தொடர்ந்து தப்பியோடிய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News