மனைவியை கத்தியால் குத்தி கொலை: கணவன் காவல் நிலையத்தில் சரண்

மனைவியின் மீதுள்ள சந்தேகத்தால் கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Update: 2021-12-24 12:15 GMT

காவல் நிலையத்தில் சரணடைந்த ஆறுமுகம்.

சென்னை கண்ணகி நகரில் வசித்து வருபவர் ஆறுமுகம்(60), கூழ் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி(50).  இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் ஆறுமுகம், கஸ்தூரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இன்று மதியம் சண்டை அதிகமாகி உருட்டுக் கட்டை தலை மற்றும் வயிற்றில் அடித்து, கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கண்ணகி நகர் காவல் நிலையத்தில் வந்து சரணடைந்தார். 

பின்னர் நிகழ்விடத்திற்கு சென்ற கண்ணகி நகர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

காவல் நிலையத்தில் சரணடைந்த ஆறுமுகத்திடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News