வேங்காவாசல் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு

வேங்காவாசல் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக சுயேச்சை வேட்பாளர் பப்பு என்கிற சசிகுமார் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு

Update: 2021-09-25 08:45 GMT

வேங்காவாசல் ஊராட்சியில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர் பப்பு என்ற சசிகுமார்

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட வேங்கைவாசல் ஊராட்சியில், நடைபெற இருக்கின்ற ஊள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பப்பு என்கிற சசிகுமார் அதிமுக சார்பில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில் வேங்கைவாசல் ஊராட்சி வார்டு 8 ல் உள்ள ஆதிநாத் அவென்யு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பகுதிகளில் வீடு வீடாக சென்று பொது மக்களை நேரில் சந்தித்து தனக்கும் தனது அணி சார்பில் வார்டு 8 ல் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கும் வாக்குகளை சேகரித்தார்.

Tags:    

Similar News