கேளபாக்கத்தில் திமுக சார்பில் 1500 பேருக்கு கபசுர குடிநீர்

கேளபாக்கத்தில் திமுக சார்பில் 1500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

Update: 2021-05-13 13:00 GMT

செங்கல்பட்டுமாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஜோதிநகரை சேர்ந்தவர் கே.ஏ.டி.அன்பு. இவர் கேளம்பாக்கம் ஊராட்சியின் 9வதுவார்டு தி.மு.க., கிளை செயலாளராக உள்ளார்,

திருப்போரூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், திருப்போரூர் வடக்கு ஒன்றியச்செயலாளருமான செந்தில் (எ)எஸ்.ஆர்.எல் .இதயவர்மன் வழிகாட்டுதலின்படி கொரோனா அலையிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அன்பு தனது சொந்த செலவில் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கினார்,

முதலவதாக கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் காவலருக்கு கபசுரகுடிநீரை வழங்கினார். பின், காவலர்களுடன் இணைந்து, தையூர் மீன்மார்க்கெட் , வண்டலூர் சாலை சந்திப்பு ,சாத்தாங்குப்பம் பகுதி, கேளம்பாக்கம் பேருந்துநிலையம், ஓஎம்ஆர் சாலை, அரசு மருத்துவமனை, ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீரை வழங்கினார்கள்,

அப்போது, தி.மு.க., கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் வாசுதேவன், திருப்போரூர் தொகுதியின் தகவல்தொழில் நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எஸ்.எல்லப்பன் ஆகியோர் கலந்துகொண்டர், அதனைத் தொடர்ந்து திருப்போரூர் காவல்நிலையத்தில் காவல்ஆய்வாளர் கலைச்செல்வி உட்பட மற்ற காவலர்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கினார்,

பின், திருப்போரூர் ரவுண்டானவில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவ்வழியாகச் சென்ற வாகனஒட்டிகளுக்கும், நடந்துச்சென்ற பொதுமக்களுக்கும் கபசுரகுடிநீரை வழங்கினார், சுமார் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரகுடிநீரை வழங்கியுள்ளனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது,

மூன்றாம் கட்ட கபசுரகுடிநீர் வழங்குநிகழ்ச்சியின் அன்புவுடன் இணைந்து சேவையாற்றிவரும் ஜோதிநகரைச்சேர்ந்த நடராஜ் , சேகர் ,குணா , மகேஷ் , திருமதி .லதா , திருமதி.கபீலா,பர்கத் மற்றும் இளைஞர்கள் அருண்,வினித் , ரஸ்சூல் ஆகியோர்கள் உடனிருந்தனர்கள்,

Tags:    

Similar News