சென்னை நீலாங்கரையில் கோபுடோ நூணுக்க பயிற்சி முகாம்

உலக நாடுகள் முழுவதும் மேம்படுத்தப்பட்டு இருக்கும் கோபுடோ நூணுக்கங்களுக்கான பயிற்சி முகாம், சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது

Update: 2021-10-05 10:45 GMT

நீலாங்கரையில் உள்ள புத்தா தற்காப்பு கலை பயிற்சி பட்டரையில் கோபுடோ சிலம்பாட்ட கராத்தே பயிற்சி முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள புத்தா தற்காப்பு கலை பயிற்சி பட்டரையில், கோபுடோ சிலம்பாட்ட கராத்தே பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில்,  முதன்மை பயிற்சியாளர் கராத்தே சேகர் தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமில், சிலம்பம், கராத்தே உள்ளிட்ட பல்வேறு பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இன்டர்நேஷனல் ஒகினோவா கொபுடோ பயிற்சியின் நுணுக்கங்களை, இந்தியாவில் உள்ள தற்காப்பு கலையை சேர்ந்த வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்,  இலவச பயிற்சி முகாம் நடைபெற்றதாகவும், அழிந்து வரும் தமிழகத்தின் தற்காப்பு கலையினை மீண்டும் மக்களிடையே கொண்டு செல்வதே தங்களது லட்சியம் என,  முதன்மை பயிற்சியாளர் சேகர் தெரிவித்துக் கொண்டார்.

Tags:    

Similar News