வேறு ஒருவருடன் பேசிய மனைவியை கொலை செய்த கணவர் கைது

காதலித்து திருமணம் செய்த மனைவி வேறு ஒருவருடன் பேசுவதால் ஆத்திரத்திரமடைந்த கொலை செய்த கணவன் கைது

Update: 2022-04-23 08:30 GMT

காதலித்து திருமணம் செய்த மனைலி வேறு ஒருவருடன் பேசுவதை நிறுத்தாததால் ஆத்திரத்தில் அடித்து கொலை செய்த கணவன் கைது.
சென்னை கண்ணகி நகரில் வசித்து வருபவர் புகழ்கொடி(29), ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரிதா(19), கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து பெற்றோர்களின் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட இருவரும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் காதல் மனைவி வேறு ஒருவருடன் செல்போனில் பேசுவதை அறிந்த கணவன்
புகழ்கொடி பலமுறை சரிதாவை கண்டித்துள்ளார். ஒருமுறை மனைவி சரிதா அவருடைய ஆண் நண்பரிடம் பேசுவதை செல்போனில் தானாக பதிவாகும்படி செய்து அதை காண்பித்து ஒருமுறை மனைவியிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு இனி பேசாமல் இருப்பதாக உறுதியளித்த மனைவி தொடர்ந்து அவருடைய ஆண் நண்பரிடம் பேசி வந்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரவு கணவன் உறங்கிவிட்டதாக எண்ணி அவருடைய மனைவி சரிதா செல்போனில் அவரது ஆண் நண்பருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதை பார்த்த அவரது கணவன்
புகழ்கொடி ஆத்திரமடைந்து மனைவியை சரமாரியாக அடித்துள்ளார். 
கண்மூடித்தனமாக தாக்கியதால் இரவு உறங்கி விட்டு காலையில் எழுந்து பார்த்தபோது மனைவி அசைவின்றி இருந்ததால் அவரை மீட்டு அருகில் உள்ள சென்னை மாநகராட்சி மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். 
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை மேற்கொண்டு வந்த மனைவி சரிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். 
தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சரிதாவின் தாயார் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து  புகழ்கொடியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் காதலித்து திருமணம் செய்து கொண்ட என் மனைவி எனக்கு தெரியாமல் வேறு ஒருவருடன் முறையற்ற உறவில் இருந்தது தெரிய வந்ததை தொடர்ந்து தான் கண்டித்தும் மனைவி முறையற்ற உறவை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்து அடித்துவிட்டதாக போலீசாரிடம் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

Similar News