சோழிங்கநல்லூர் அடுத்த ஈஞ்சபாக்கத்தில் இலவச இரத்ததான முகாம்

சோழிங்கநல்லூர் அடுத்த ஈஞ்சபாக்கத்தில் இலவச பல் மற்றும் இரத்ததான முகாம் இன்று நடந்தது.

Update: 2021-10-18 04:45 GMT

சோழிங்கநல்லூர் அடுத்த ஈஞ்சபாக்கத்தில் இலவச பல் மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த ஈஞ்சம்பாக்கம் சென்னை கிழக்கு அரிமா சங்க மருத்துவ மையத்தில் இன்று காலை ரத்த பரிசோதனை மற்றும் ரத்த தான முகாம் நடந்தது.

முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். பருமன் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் செய்து கொண்டனர். இந்த முகாமை சென்னை கிழக்கு அரிமா சங்கம் தைரோகேர், எழும்பூர் அரிமா ரத்த வங்கி ஆகியவை இணைந்து நடத்தின. ரத்த தானம் செய்த ஒவ்வொருவருக்கும் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் புத்துணர்ச்சி பெறும் வகையில் பழச்சாறு பிஸ்கட் வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை சங்க அறங்காவலர் குமார் மற்றும் பலர் செய்திருந்தனர். இன்று இரத்ததான முகாம் இன்று முடிந்து வருகிற டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை சலுகை விலையில் தைரோகேர் டயக்னாஸ்டிக் சிகிச்சைகள், பல் சிகிச்சை வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்

Tags:    

Similar News